- Tuesday
- April 28th, 2026
மக்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியாதவர்கள் பின்கதவு வழியாக இப்படியான ஒரு பேரவை மூலமாக கொண்டுவர முனைவது ஜனநாயக விரோத செயலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் தொடர்ச்சியாக...
பேரிடர் நினைவுநாள் படைத்தரப்புக்குரிய தினம் அல்ல. இதனை இராணுவத்துக்குரிய தினம்போலக் கொண்டாடுவது தவறானது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கரைச்சிப் பிரதேசசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26.12.2015) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தினம் பிரகடனப்பட்டிருப்பதன் நோக்கம்,...
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27) யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் புதிய அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பு , மற்றும் புதிய தேர்தல் சட்ட முறை சம்பந்தமான விடயங்கள் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு...
அரச புலனாய்வுப் பிரிவு எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து விபரமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. ஒரு அரசியல் அணியின் தலைமைத்துவம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பாரிய திட்டங்களை ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள்...
பண்டிகைக் காலங்களில் சீனி மற்றும் தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக இந்நாட்டில் நீரிழிவு உட்பட பல நோய்கள் உருவாகுவதற்கு பிரதான காரணியாக சீனி மற்றும் எண்ணெய் காணப்படுகின்றது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹீபால,சீனி பாவனைக்கு ஏற்ப குறித்த...
தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
மல்லாகம் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய யுவதியை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என அவரது தந்தையால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து தனது வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தவர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் எங்கும் தேடி யுவதியை காணாத நிலையில் அன்றைய தினம் இரவு பொலிஸில் முறைப்பாடு...
அரச பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பொன்றுக்கு 35ஆக மட்டுப்படுத்தியிருப்பது நியாயமற்றது எனவும், அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அனுமதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டதால் எஞ்சியுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்கள் இந்த 35 மாணவர்கள் கட்டுப்பாட்டால் தமது...
வேகமாகச் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கிணற்றுக்கட்டுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கிணற்றடியில் இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சோந்த வின்சன் வின்ஐக்சன்...
இதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நகர சபை மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...
பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...
காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை யாழில் இரண்டு விசாரணை அமர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த அமர்வுகள் இடம்பெற்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேச...
இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்நிலையான நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. இந்த நிலையில், அவர் இலங்கையில் பல்வேறு முதலீட்டு...
முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை, திட்டமிட்ட படுகொலையாகவே தான் உறுதியாகக் கருதுவதாக மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து அடையாளந் தெரியாதோரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட...
சவுதியில் பணிபுரியும் இலங்கை தொழிலார்களின் சம்பளத்தை இலங்கை ஏ.டி.எம்கள் ஊடாக இலகுவாகவும், துரிதமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்த வேண்டுகோளை சவுதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழில்கள் அமைக்க மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும்...
யாழ்.குடாநாட்டுக்கு நேற்றய தினம் வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். கடந்த சில தினங்களாகவே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் யாழ்.கோட்டை, ஆரியகுளம் நாக விகாரை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்.நகரப் பகுதிகளில் காணப்பட்டனர். இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினமான நேற்று வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். பண்டிகை நாட்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
