சென்னை மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் ஈழ அகதிகள்

தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர். சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு,...

கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
Ad Widget

20 மாணவர்களுக்கு HIV : பல்கலை அனுமதியின்போது மாணவர்களுக்கு HIV பரிசோதனை!

பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது...

வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம், எதிர்க்கக்கூடாது! – சம்பந்தன்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக்...

திருகோணமலைக் கடலில் சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களுடைய சடலங்கள் ?

திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு...

உலக்கையால் அடி வாங்கிய பொலிஸார்!

உங்கள் வீட்டுக்கருகில் எவ்வாறு கசிப்பு போத்தல்கள் வந்தது என்று வினவிய இரண்டு பொலிஸாரை உலக்கையால் தாக்கிய சம்பவம், வடமராட்சி, துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. துன்னாலைப் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதற்காக, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், குறித்த பகுதிக்குச்...

விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!

சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

வவுச்சர் திட்டத்தில் இணைய மாட்டோம்: ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம்

அடுத்த வருடம் மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள வவுச்சர் வழங்கும் திட்டத்தில் தாம் ஈடுபடப் போவதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

முல்லை பிரசாந்தின் குருதிபடிந்த மண் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு

வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள தமிழக மக்களை துயரில் இருந்து மீட்க அனைவரும் முன்வரவேண்டும்

தமிழக மக்களை துயரில் இருந்து மீட்க அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியீடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்... அண்மைய வாரங்களாக தமிழகத்தில் பெய்த பயங்கர மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர் முழுமையாக சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. ஓட்டுமொத்த மக்களினதும் வாழ்வாதாரங்கள், அசையும் அசையாச்...

பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் முறைப்பாடுகள்! – யாழ்.அரச அதிபர்

பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் 3 அல்லது 4 முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்திற்கு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள், மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பலர் நேரில் சென்று முறையிட தயக்கம் மற்றும் அச்சம் போன்ற பல காரணங்களினால், குறித்த சம்பவங்கள் வெளிவராமல் போவதால் மாவட்டச்...

கணிதம் சித்தியடையாவிட்டாலும் கற்கையை தொடரும் முறை

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும்முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்....

இலங்கை பெண்ணின் மரண தண்டனை பிற்போடப்பட்டது

திருமணத்துக்கு முரணான உறவைக் கொண்டிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கல்லால் எறிந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதை, சவூதி அரேபிய அரசாங்கம் பிற்போட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பாக ஆராயப்படும் வரையிலேயே, இந்தத் தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தால்...

தமிழர் வரலாற்றில் 2016 அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்!

2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தவை...

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவை விலக்கிய ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப்...

இணையம் தொடர்பாக 2600 முறைப்பாடுகள்

இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கின்றார். தமது பெயர்களில் வேறு நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி இருப்பது தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில்...

வட இலங்கைப் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி!

பாலியல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வட இலங்கையிலுள்ள பெண்களுக்கு பயிற்சியொன்று தன்னார்வ அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகிய நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 ஆம் தேதி வரையிலான 14 நாட்கள் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில்...

தமிழக மக்களுக்கு வட மாகாண சபை ஊடாக உதவலாம்!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னேடுக்க வடமாகாண சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாணத்தில் இருந்து எவ்விதமான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான கலந்துறையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அவைத்...

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவத்திடம் இருந்து மீட்கப்படும்! – கல்வி அமைச்சர்

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அரசு பொறுப்பேற்கும் என்று என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது, 14 கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts