யாழில் சிறைக்கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்திலும் சிறைக்கைதிகள் நேற்று (25) விடுவிக்கப்பட்டனர். சிறுகுற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள் என ஒரு பெண் உள்ளிட்ட எட்டுபேர் விடுதலைசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு யாழ் மத்திய சிறைச்சாலையில்...

நாடு முழுவதும் இன்று காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....
Ad Widget

பாடசாலை மாணவிகள் இருவரை காணவில்லை

பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு...

கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245,000 பெறுமதியான உதவிகள் வழங்கல்

தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2015 டிசம்பர் மாதம் கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245000 பெறுமதியான உதவிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கியுள்ளது. மேற்படி உதவிகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளாகவும் கல்வி உபகரஙணங்கள் வழங்குதல் மற்றும் இலவசக் கல்வி...

இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் சந்தித்து பேசினர்!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இருவருக்கும முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது...

பொலித்தீன் தடையை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ஜனவரி மாதம் முதல் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. 20 மைக்ரோனுக்கு குறைவான அடர்த்தியைக் கொண்ட பொலித்தீனை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது போன்றவை 2007ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே பொலித்தீன்...

சுனாமியில் சிக்கியுள்ளார் சம்பந்தன்!

விக்னேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட விக்னேஸ்வரனே பிரபலமானவராக காணப்படுகின்றார். உதாரணமாக விக்கினேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...

சம்பந்தனுடன் வட மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பு

கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு...

யாழில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம்(22) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச்செயலமர்வில் சிறுவர்...

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை கட்டியெழுப்புவோம்!

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை நாம் அனைவரும் கட்டியெழுப்புவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் இன்று (25) அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நத்தார் தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும்...

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னால் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க...

இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாவிரதம்

இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகைக்...

தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல – சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்க படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் என்பதோ அல்லது ஒற்றையாட்சியோ நிச்சயமாக ஏற்றக்கொள்ளப்பட முடியாது. அது இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல என அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல்...

வயல்களுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்க புங்குடுதீவு விவசாயிகளுக்கு முட்கம்பிச் சுருள்கள்

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...

தனியார் துறையினரின் சம்பளம் தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்

தனியார் துறையில் பணிபுரியும் சேவையாளர்களின் ஆகக் குறைந்த வேதன தொகை தொடர்பில் சட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் வேலைப் பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள்...

ஐ.நா மனித உரிமை பேரவையின் ஜுன் அமர்வு நிகழ்ச்சி நிரலில் இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததனால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்...

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்...

கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் பேரவையை தமிழ் மக்கள் நிராகரிப்பர்! – சிவாஜிலிங்கம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தால் தமிழ் மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள்; குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுத்...
Loading posts...

All posts loaded

No more posts