Ad Widget

யாழில் ஜனாதிபதி தலைமையில் தேசிய நத்தார் கொண்டாட்டம்!

தேசிய நத்தார் கொண்டாட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்து கொள்வார். கர்தினாலும் வருகை தருவார். இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன், கொழும்பை மையப்படுத்தி பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றார்.

Related Posts