Ad Widget

கிளிநொச்சியில் இதுவரை 19 பேரை பலியெடுத்த ரயில்!

பாதுகாப்பான ரயில்வே கடவையை அமைத்துத் தரக் கோரி கிளிநொச்சியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

railway-protest-kili-

கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட முறிகண்டி முதல் முகமாலை வரையான பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ரயில்வே திணைக்கள அதிகாரி, மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

Related Posts