எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருளாதார திட்ட கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.