Ad Widget

அங்கஜனின் இல்லத்தில் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்ற பின்னர் கொழும்பு திரும்பியுள்ளார்.

my3-angajan

நேற்றய தினம் யாழிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு தனது குழுவினருடன் சென்று அங்கு உரையாடிய பின்னர் பலாலி விமானப் படைத் தளத்தில் இருந்து கொழும்பிற்கு அவர் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல் ஊடாக அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றதுடன்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts