- Tuesday
- April 28th, 2026
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமது உறுப்பினர்கள் மூன்று பேரும் நிர்வாகத்தின் அனுமதி இன்றியே அந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது....
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில்...
நாளை (30)தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சந்திக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் அதன் தலைவர் சம்பந்தன் , மாவை சேனாதிராஜா , சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என கூட்டமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை கிடைத்த செய்திகளின் படி...
பஸ்ஸில் பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடிய நபரை பிடித்து பயணிகள் நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த நபர், பயணிகளின் பணப்பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனை அவதானித்த சக பயணிகள்...
பருத்தித்துறை முனைப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (28) அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். முனைப்பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. முனைப் பகுதியிலிருந்து 3 மீனவர்கள் படகொன்றில் கடலுக்குள் சென்ற போது, கடும் கடற்கொந்தளிப்பால்...
வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் நலன்புரி நிலையங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டன. இந்நிலையில் யுத்தம்...
தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
வட மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் அமைந்துள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுவதாகவும், அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவ்...
அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. புளொட்...
அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’ குறுந்திரைப்படம் கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வெளியிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை ச.இராகவனும், மதிப்பீட்டுரையை ந.மயூரரூபனும் நிகழ்த்தினார்கள். பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வியலை பேசும் இந்தக் குறுந்திரைப்படத்தை தர்சனின் ஒளிப்பதிவிலும், ஸ்ரீ நிர்மலனின் இசையிலும், ஸ்ரீ துஷிகரனின் படத்தொகுப்பிலும், பிரதேசக்...
பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் காணாமற்போயுள்ளார். இச்சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே, எண்ணெய் விலை அதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். நேற்றய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் புங்குடுதீவு மாணவியின்...
எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள் அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அதை சரியான முறையில் புரிந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத் திய நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை...
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று (28) நாட்டின் அனைத்து பாகங்களிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை...
Loading posts...
All posts loaded
No more posts
