சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது!

சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பிரஷாந்த குணரத்ன குறிப்பிட்டுள்ளார். புகைப்படம் எடுக்கும் போது, ஏற்படும் பிளாஷ் ஔி (flash light) காரணமாக ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக,...

இந்தியா – இலங்கைக்கு இடையில் சீபாவும் இல்லை பாலமும் இல்லை

இந்தியா - இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப் போவதாக பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன, எனினும் அது நடக்கப் போவதில்லை என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் சீபா ஒப்பந்தம் கையெழுத்திடப் போவதில்லை எனவும், பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு குறித்த...
Ad Widget

தமிழ் அரசுக்கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் சந்தித்தன!

உத்தேசிக்கப்பட்ட அரசியல் தீர்வில் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றுவது குறித்தான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (30.12.2015)  தமிழ் அரசுக்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று (30)இடம்பெற்றது. இந்தச்சந்திப்பு தொடர்ந்துமுன்னெடுக்கப்படும் என அறியவருகின்றது. சந்திப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகிய மூவரும்...

சங்கா , மஹேலவின் நிறுவனத்திற்கு தடை!

அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை, லைவ் இவன்ஸ் (Live Events) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த...

தமிழ்மக்கள் பேரவையில் இணைய அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!- ஏற்பாட்டுக்குழு அறைகூவல்

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் உரிமைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து...

மரத்திலிருந்து வீழ்ந்து இறந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூபா ஒரு இலட்சம்

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....

நாட்டின் சில பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய...

தாதியின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் கைது

ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன், வீதியில் நின்றுகொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை (28) பணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த...

700 ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன – முதலமைச்சர் சி.வி

வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 700 பேர் நியமிக்கப்படவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று புதன்கிழமை, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

எதிர்வரும் 3ஆம் திகதியே க.பொ.த(உ/ த) பெறுபேறுகள் வெளியாகும்!

இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த(உ/த) பெறுபேறுகள் , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் இன்று பெறுபேறுகள் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் வெளியான அறிக்கையை மறுக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்' என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்- 'எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை - ஒருபோதும் இணையோம்'...

வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு!

வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர்....

மக்களை அணிதிரட்டி நீதிக்கும் விடுதலைக்குமான ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம்!- நாடு கடந்த தமிழீழ அரசு

இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

கடற்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை நீரியல்வளத் திணைக்களம் வழங்க மறுப்பது ஏன்?

தென்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு அங்கி வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததாலேயே அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களது உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலே சங்கத்தின் உபதலைவர் தவச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்...

நெடுந்தீவு சிறுமி கொலை தொடர்பான இணையச் செய்தியில் எதுவிதமான உண்மையும் கிடையாது: முன்னாள் எம்.பி.அலன்ரின்

நெடுந்தீவு சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சில இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்மறுப்பறிக்கையை வெளியிடுகின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் (உதயன்) குறித்த செய்தி தொடர்பாக விடுத்துள்ள ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயன்றால் பேரவையில் இருந்து வெளியேறி விடுவோம்! – சித்தார்த்தன்

தமிழ் மக்கள் பேரவை பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் அபிப்பி்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கிறோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில்...

யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு

நேற்று காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன....

தமிழ் மக்கள் பேர­வைக்கும், வட மாகாண சபைக்கும் தொடர்பில்லை!

அண்­மையில் உரு­வா­கி­யுள்ள தமிழ் மக்கள் பேர­வைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை என, மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேரவை என்ற சொல்லை கைத­டியில் அமைந்­துள்ள வடக்கு மாகாண சபை அலு­வ­ல­கத்­துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்­கு­கின்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக...

கண்டியின் சில இடங்களில் நில அதிர்வு

குண்டசாலை மற்றும் மெததும்பர பிரதேச செயலகப் பகுதிகளிலுள்ள சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். திகன, அம்பகோட்டை, குபுக்கந்துர, செனரத்வெல, மாபேரிதென்ன, நிதுலேமட ஆகிய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.15 - 10.45 அளவிலான காலப் பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலம் அதிர்ந்ததாக மக்கள்...

ஆடைகள் இன்றி வீதியில் செல்ல வேண்டும் என்பதா அவர்கள் கோரிக்கை?

அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த...
Loading posts...

All posts loaded

No more posts