Ad Widget

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஜனாதிபதிக்கு நன்றி – சீ.வி.கே.சிவஞானம்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.

மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களை கோணப்புலம் முகாமில் சந்தித்து மக்களின் நிலமைகளை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் யாழ்.நகரில் நடைபெற்ற நத்தார் நிகழ்வில் வலி, வடக்கு மக்களின் இன்னல்களுக்கு 6 மாதங்களில் தீர்வு காண்பேன் எனவும், தென்னிலங்கையில் இருந்து கொண்டு இனவாதம் பேசும் தீவிரவாதிகள் வடக்குக்கு வந்து நிலமைகளை பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு வடமாகாணசபை சார்பில் நன்றுகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்.

என அவர் தெரிவித்துள்ளார்

Related Posts