Ad Widget

நடைமுறைப்படுத்த முடியாத பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளோம்

வடமாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 258 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம். ஐ.நா தீர்மானங்கள் உள்ளிட்ட சில பிரேரணைகள் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிந்தும் நிறைவேற்றியுள்ளோம் என வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

வட மாகாண சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட பிரேரணைகள், எண்ணங்கள், அபிலாசைகள், நோக்கங்களை வெளிப்படுத்தும் பிரேரணைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கும் பிரேரணைகள் என 3 வகையான பிரேரணைகளை சபையில் நிறைவேற்றியுள்ளோம்.

மேலும்,ஐ.நா சபைக்காக நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு, சர்வதேச விசாரணை வேண்டும் என தீர்மானங்கள், மாகாண சபைகளின் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக நிறைவேற்றினோம். அதற்கு பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அந்தப் பிரேரணைகளை நிறைவேற்றினோம் என்றார்.

Related Posts