விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன்- ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலை வைத்தியர்

விபத்துக்கு  உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை  அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் குறித்து  தெரிய வருவதாவது , ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு...
Ad Widget

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் : மஹிந்த கையொப்பமிட்டார்

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

சரத் பொன்சேகா எம்.பியாகிறார் ?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி...

சம்பந்தன் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே – வீ.ஆனந்தசங்கரி

“இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட AnanthaSangaree.போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில்...

மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்

தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க...

போரின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள்...

யாழ் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நேற்று தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று ஜெனரலாக நியமிக்கப்பட்டதை அடுத்து சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்குகிறது தமிழரசுக் கட்சி! – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை...

யோஷிதவுக்கு எதிராக மேலும் 5 குற்றச்சாட்டுக்கள்!

பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் இருக்கும் யோஷித உட்பட ஐவருக்கும் எதிராக மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே தற்போது யோஷித ராஜபக்‌ஷ கைதாகி உள்ளார். இவருக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...

காணாமல் போனோரின் உறவுகளுக்கு மதிப்பளித்து வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அல் ஹுசைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயீத் ரா அத் அல் ஹுசைன் நேற்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாட சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தின் வாசலில் காணாமல் போனோரின் உறவினர்கள் காத்திருந்தார்கள். வாகனத்தில் வந்த ஆணையாளர் பாதுகாப்பாளர்களை...

அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் – இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன்

நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து...

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை!

தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வாறான...

ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும்- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் வடக்கு முதல்வரால் தமிழ்...

யாழ். வராமலேயே புதுடெல்லி திரும்பினார் சுஷ்மா!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார். நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் அவர் புதுடில்லி நோக்கி பயணமானார். இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக நேற்று இலங்கைக்கு...

12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்!

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு...

மைத்திரியின் அரசு மீது மோடி அதீத நம்பிக்கை! – ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய அரசும் இலங்கையின் புதிய தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழான அரசின் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசு பூரண ஆதரவு வழங்கும் என்றும்...

தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்

இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் (freestyle swimming)முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில்...

கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்!

யாழ்ப்பாணம் கட்டைபிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் புதிய செம்மணி வீதியை சேர்ந்த க.பீரதீபன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில்...

தமிழரசுக் கட்சியில் இணைந்தார் சிவமோகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.எல்.ஆர்.எப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அத்துடன், கட்சியில் இணைவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading posts...

All posts loaded

No more posts