யாழில் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு!

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ். மாவட்டத்திற்கான மீண்டுமொரு அமர்வை ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்தமாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் முறைப்பாடுகளை ஏற்பதற்கு இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஏற்கனவே...

வட மாகாண அமைச்சு உதவவில்லை! சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர் ஆதங்கம்

தாய்லாந்தில் இடம்பெறவுள்ள 100 கிலோ மீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டத்தில் பங்கேற்க செல்லும் வீரருக்கு வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு எவ்வித உதவிகளையும் செய்யாத நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த குமார் நவநீதன் என்ற வீரர் எதிர்வரும் 20ம் திகதி தாய்லாந்தில் இடம்பெறவுள்ள தாய்லாந்து பாங்கொக்...
Ad Widget

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது!!

"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டன. இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது அனைவரும் அறிந்ததே. விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத...

காணாமற்போனோரின் பட்டியல் இருப்பது மகிழ்ச்சி

சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் தங்களிடம் பட்டியல் இருப்பதாக 58ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் ஒப்புக்கொண்டுள்ளமை முதன்முதலாக நடைபெற்ற சம்பவம். இது மகிழ்ச்சியைத் தருகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் சின்னத்துரை சசிதரன் (எழிலன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு...

பக்கெட் பானங்கள் சுகாதாரத்துக்கு கேடு

பாடசாலை சிறுவர்களிடையே உள்ள புதிய உணவுப் பழக்கவழக்கங்களின் ஒன்றான, சீனி கலந்த பானங்கள், சுவையூட்டப்பட்ட குளிர்பானப் பொடிகள், சுவையூட்டப்பட்ட பால் பக்கெட்கள் போன்றவற்றின் பயன்பாடானது எதிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்று, தேசிய வைத்தியசாலையின் நச்சியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களிலோ அல்லது வேறு சில பொருட்களால் செய்யப்பட்ட பக்கெட்டுகளிலோ, ஸ்ட்ரோ (உறிஞ்சும்...

கூட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் குழுவாக இணைந்து செயற்படும்! பங்காளிக் கட்சிகளிடம் சம்பந்தன் உறுதி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை ஏறிய பிக்குகள்! வசமாக மாட்டினர்!!

காவி உடை அணியாமல் சாதாரண உடையில் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து இவர்கள் வந்துள்ளனர். 5 பௌத்த பிக்குகளில் ஒருவரிடம் கஞ்சா பக்கட்டுகளும் இருந்துள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் ஹற்றன் - குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த...

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் 25 வருடங்களாக இயங்காமல் இருந்த நடேஸ்வராக் கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்டிய சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக வலி வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் போர்...

ஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனி சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) ஜேர்மனி அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கலைச் சந்தித்தார். ஜேர்மனி அதிபருடைய அலுவலகத்திற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு அணிவகுப்புடன் கூடிய பெரு வரவேற்பு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையினைத் தொடர்ந்து இரண்டு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளின்...

சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை 58-ம் படையணி ஒப்படைக்க வேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க...

லசந்த வழக்கு – இவர்களைத் தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்கும் படி, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இரு சந்தேகநபர்களின் உருவம் குற்றப் பதிவு பிரிவினரால் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் தொடர்பில் சரியான தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ்...

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை சட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச அலுவலகங்களுக்கு மூன்று தினங்களுக்கு தாமதமாக வரும் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த விடுமுறையிலிருந்து அரை நாள் விடுமுறை குறைக்கப்பட வேண்டும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அரச நிர்வாகச் சுற்றறிக்கையின்...

வடமாகாண முதலமைச்சர் ஆளுனர் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எதிரான ஆணை வழக்கை யாழ் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் கீழ் வரும் வைத்தியசாலைகள், அலுவலகங்கள் என்பவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கோரப்பட்ட கேள்விப் பத்திரம் சம்பந்தமான ஆணை வழக்கை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளார். இந்தக் கேள்விப்பத்திர கோரலுக்காக விண்ணப்பம் செய்திருந்த பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று, தனக்கு வரவேண்டிய...

யோஷித ராஜபக்சவின் பிணை மனு 29 ஆம் திகதி பரிசீலணை

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால்...

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்

வேலையில்லா பட்டதாரிகளின் சங்கத்தினர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று புதன்கிழமை முதல் கொழும்பு - புறக்கோட்டையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லையென தெரிவித்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை புகையிரத நிலையத்திற்கு...

நீதிமன்ற களஞ்சிய அறையில் அலைபேசி வெடித்ததில் ஆவணங்கள் நாசம்

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சான்று பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறையில் இருந்த அலைபேசியொன்று இன்று புதன்கிழமை (17) காலை வெடித்ததில் அறையினுள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அருகிலிருந்த சான்றுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. அலைபேசியின் மின்கலம் வெடித்து தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, விரைந்து...

விண்ணப்பம் கோரல்

கிராம அலுவலர் தரம் 3இல் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள், உள்நாட்டலுவல்கள் அமைச்சால் கோரப்பட்டுள்ளது. 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தரத்தில் 4 திறமைச் சித்திகளுடன் 6 சித்திகளும் க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர்...

சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி!

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு...

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாகவும்,சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 1 ரூபா 50 சதமாகவும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளர் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94...

பிறிதொரு மாகாணத்தை உருவாக்க வேண்டும் – பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பகுதிகளான பொலனறுவை, சேருவா, மினிப்பே, மஹியங்கனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தை உருவாக்குதன் மூலம், கிழக்கு மாகாணத்தை தமிழ், முஸ்லிம் மக்களுக்கான மாகாணமாக மாற்றி வடக்கையும் கிழக்கையும் இணைந்த அலகை உருவாக்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு...
Loading posts...

All posts loaded

No more posts