இலங்கை நீதித்துறை அரசியல் மயமானதால்தான் சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறுவதை ஐ.நா. வலியுறுத்தியது!

இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித...

சபை அமர்வைக் குழப்பும் மஹிந்த அணியின் வியூகத்தை முறியடித்தார் ரணில்! – சட்டமூலத்தை நிறைவேற்றி அரசு அதிரடி

செங்கோலை தூக்கிச்சென்று சபை நடவடிக்கைகளைக் குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த திட்டத்தை முறியடித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு. இதனால் சபைக்கு நடுவில் கூட்டாக களமிறங்கி சபா பீடத்தை சூழ்ந்துகொண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு ஊளையிட்ட மஹிந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...
Ad Widget

பரந்தன் – முல்லை பிரதான வீதியில் 35 ஏக்கர் காணி இராணுவத்தால் சுவீகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...

ஊடகவியலாளர்களுடன் செல்பி எடுத்த ஹுஸைன்

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார். அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் கமெராவை கையில் எடுத்த அவர், ஊடகவியலாளர்களை படம் எடுத்ததோடு அவர்களோடு செல்பியும் (Selfie) எடுத்துக் கொண்டார்.

மனித உரிமைகள் ஆணையாளர் – த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கன்சாட்டில் இருந்து நீக்கப்படுபவற்றை செய்தியாக்க வேண்டாம்

வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார். மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன....

பொன்சேகா எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளது?

மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே...

“தேசம்“ அல்லது “கூட்டம்” என்பதே தற்போது மக்கள் முன்னுள்ள பெருவினாவாகும் – கஜேந்திரகுமார்

தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்...

வன்னி இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31...

முதுகை வளைத்து செடி நடும் பலமிக்க நாடுகளின் தலைவர்களும்! வளையாத இலங்கை தலைவர்களும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தற்காலிகமாக படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றியது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும்...

வழி அனுமதிப்பத்திரமே முரண்பாடுகளுக்கு காரணம்

அனுமதி பத்திரம் வழங்குவதற்குரிய அதிகாரம் மாகாண போக்குவரத்து அதிகார சபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கே உள்ளது. ஆனால், இலங்கையில் எந்த இடத்திலும் இல்லாதவாறு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் மாவட்டச் செயலாளர் அவ் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளார். முறையற்ற விதத்தில் தனியார் பஸ்களுக்கு வழங்கப்படும் வழி அனுமதிப்பத்திரமே இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் தனியார்...

சமாதானம் செய்யவே கடிதம் கோரினேன்

விபத்துக்குள்ளான இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்காகவே தான் கடிதம் கோரியதாக ஊர்காவற்றுறை “பி” பிரிவு ஆதார வைத்தியசாலை வைத்தியர், ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னிலையில் தெரிவித்தார். ஊர்காவற்றுறை சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (08), மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார். விபத்தின்...

சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை – மனித உரிமைகள் ஆணையாளரிடம் தேரர்கள் கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்...

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்தம் வடமராட்சியில்!

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...

கிரிக்கெட் தேர்தலில் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் அர்ஜூன முறைப்பாடு

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சந்தேகநபர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர்!!

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி தெரிவித்திருந்தனர். ஆனால், திங்கட்கிழமை (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10 சந்தேகநபர்களும் முழுமையான தேக ஆரோக்கியத்துடன் மன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர். தங்கள் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகநபர்கள் கடந்த...

கச்சத்தீவு தேவாலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத்...

வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னாள் போராளிகள் புறக்கணிப்பு!

முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன தலைவர் மு.சர்வானந்தன் தெரிவித்துள்ளார். அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவர்கள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 12000 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு...

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய மாணவி உயிரிழப்பு!

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...
Loading posts...

All posts loaded

No more posts