Ad Widget

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒரு மணிநேர அடையாள போராட்டத்தை இன்று யாழ்.பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுத்தனர்.

குறித்த அடையாள போராட்டம் நண்பகல் 12மணி தொடக்கம் 1 மணிவரை இடம்பெற்றது.

ஓய்வுதிட்டத்தினை மறுபரிசீலனை செய்க, ஓய்வுத்திட்டத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது, சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொது காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மொழிக் கொடுப்பனவு மீள வழங்கல், சொத்துக் கடன் தொகை அதிகரித்தல், மாதாந்த இழப்பீட்டு படியை அதிகரித்தல், அரசியல் தலையீடற்ற நியமனம், வினைத்திறனற்ற ஊழியர் பணிநீக்கம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts