Ad Widget

பொன்சேகாவுக்ககான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்கு!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உயர்நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர், ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை சட்டவிரோதமானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 99ஆம் ஷரத்தை மீறும் வகையில், சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலானது என சுட்டிக்காட்டியுள்ளது.

சரத் பொன்சேகாவின் நியமனத்திற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்க இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகா கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts