வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்க ஏற்பாடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா தாயக அலுவலகத்தில் நேற்று இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்....

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் நேற்று புதன் கிழமை மதியம் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து நேற்று புதன் கிழமை மாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது குறித்து வருகை...
Ad Widget

சம்பந்தனின் அலுவலகம் முன் கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகம்

இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்று (27) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கைது!

எதிர்வரும் மே-18ம் திகதி அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும் விசாரணைக்கு அழைப்பதும் இடம்பெறுவதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதும் சட்டரீதியாக கைது செய்யப்படுவதற்கு அப்பால் கடத்தப்பட்டு பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தல். இம்மாதம்...

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அழைப்பு!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருவதுடன், மீண்டும் அவர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் அனைவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு புனர்வாழ்வு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் யாழ் மாவட்ட புனர்வாழ்வு...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பகுதியில் தனது வீட்டிலிருந்த சமயம் ராம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் வைத்து கலையரசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்றும் திருகோணமலையில் பாதுகாப்புப் படைத்தரப்பினர் மீதும் காவல்துறையினர் மீதும்...

புலிகளின் சிறப்புத் தளபதி நகுலன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்று காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என...

தமிழருக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளன எனவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்கள் தீர்மானம்!!

தமது காணிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராக போராடுவதற்கு முல்லைத்தீவு மக்கள் தீர்மானித்துள்ளனர். அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட...

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு முன் கண்ணீர் சாட்சியம்!

ஓமந்தையில் இராணுவ வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச் சிப்பாயிடம் கேட்டிருந்தேன். அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல்போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார்....

600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி, சமூகமயப்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலிருந்த போது 24ஆம் திகதி...

பிரபாகரனால் முடியாது போனதை சம்பந்தன் செய்கிறார்

பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்....

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் தளபதி ராம் கடத்தல்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால், நேற்று காலையில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். திருக்கோவில் தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே நேற்று காலை ராம், இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி...

சம்பந்தனுக்கு எதிராக கிளிநொச்சி காவற்துறை விசாரணை!!

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக...

ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவர்

யாழ்.மாவட்டத்தில் ரௌடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரௌடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட...

சம்பந்தரின் குத்துக்கரணம்! ஊடகவியலாளர்கள் மூவர் ராஜினாமா?

அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார்....

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் சுவாமிநாதன் விளக்கம்!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் விளக்கமளித்தார். அவர் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், சூழல் வெப்பநிலையை விட, வீட்டிற்குள் நிலவும் வெப்பமானது 3 தொடக்கம் 5 பாகை செல்சியஸ் குறைவாகவே காணப்படும். இந்த வீடானது 60 தொடக்கம் 70 ஆண்டுகள் வரை நீடித்து...

விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் செயற்படுவதாகக் கூறியும் உடனடியாக இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரிக்குமாறு வலியுறுத்தியும் பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. பொலிஸார் விசாரிக்க...

நாட்டைப் பிரிக்காத நிலைப்பாடே தீர்வுத் திட்ட முன்மொழிவுகள்!

"நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவை நாம் தயாரித்திருக்கின்றோம்." இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும்...

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

கடற்படையினரின் வசமிருக்கின்ற முள்ளிக்குளம் காணிகள், வெகுவிரைவில் விடுவிக்கப்படும்' என, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள்குடியேற்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts