மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்! உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் விபரம்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),...
Ad Widget

செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை!

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. எனினும்...

மேலும் 3 அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வசம்

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த...

வடமாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் அதிரடி மாற்றம்

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00...

வெள்ளம் பாதிப்பு; யாழ். மாவட்ட செயலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...

வெள்ளக்காடாகக் காணப்படும் கொழும்பு! பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் மக்கள் முகாம்களுக்குள் முடக்கம்!!

தலைநகர் கொழும்பை மூழ்கடித்துள்ள வெள்ள நீர்மட்டம் குறையாத காரணத்தால் கொழும்பு வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டு பெரும் அவலத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வெள்ளப்பாதிப்பு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தும் வகையில் திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேரளவில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ள நீர்மட்டம்...

கொழும்பில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை – மக்கள் மத்தியில் அச்சம்!

கொழும்பில் சிலநாட்களாகத் தொடர்ந்துவந்த சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வானம் சற்று வெளித்திருந்தது. இன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ரோனு’ சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் அது தற்போது நாட்டைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தொடர்கின்ற...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்...

காங்கேசன்துறைக்கு வடக்கே தாழமுக்க சூறாவளி!

தென்னிந்தியாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி காங்கேசன்துறைக்கு வடக்கே 400 கிலோமீ்ற்றர தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலாம். ஆயினும் நாட்டின் வடபகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்தே காணப்படும். எனினும் இச்சூறாவளியால் இலங்கையில் பெரிதளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படா விடினும் காற்றின் பாதிப்புக்கள் காணப்படுமெனவும்...

எச்சரிக்கை!!..குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்துள்ளது!!!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை...

இன்னும் 24 மணி நேரத்தில் சுறாவளி: கனமழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய...

இயற்கை சீற்றத்தினால் நான்கு இலட்சம் பேர் பாதிப்பு;இலட்சக்கணக்கானோர் முகாம்களில்

தொடர்ச்சியாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சமாக அதிகரித்திருப்பதோடு, மூன்று இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 94 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து மூவாயிரத்து 682 பேர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணித்த மூவர்!!

முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்- முள்ளிவாய்காலில் விக்னேஸ்வரன்

சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு

வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....

முள்ளிவாய்க்கால் பேரவல நாள் இன்று! இழந்த உறவுகளுக்கு தரணி எங்கும் நினைவுகூரல்!!

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...

தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்! – முள்ளிவாய்க்காலில் அணிதிரளுமாறு மாவை எம்.பி. அழைப்பு

"போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே...

சுங்க அதிகாரிகளை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel...
Loading posts...

All posts loaded

No more posts