வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள்...
Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் 'முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்’ இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், அகவணக்கம் செலுத்தி...

பசில் ராஜபக்ஷ கைது!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகி போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்மைக் கொல்ல தீவிரத் திட்டம்

தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்...

மஹிந்தவும் சகாக்களும் விரைவில் கைதாவர்!

"மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்"இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. "மஹிந்த ராஜபக்‌ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல...

புங்குடுதீவு மாணவி கொலை:’சிறைச்சாலை வாகனங்களுக்குள் கத்துவதால பிரயோசனம் இல்லை’

சந்தேகநபர்கள் தாங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்குள் வைத்து தெரிவிக்க முடியும். அதனை விடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் சிறைச்சாலை வாகனங்களுக்குள் இருந்து கத்துவதால் எந்தப் பிரயோனசனமும் இல்லை' என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறினார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும்...

மஹிந்த ஆட்சியில் கடத்தப்பட்ட சிலர் உயிருடன் இருக்கின்றார்கள்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணமல்போன பலர் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். எனினும், குறித்த நபர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை எனவும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தலைக் கண்டித்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டன...

தமிழினியின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில்...

வெளிநாட்டு நிதியில் யாழ். குடாநாட்டில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்!

வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிக் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அண்மைக் காலமாக யாழ் குடா நாட்டில் இடம்பெற்று வருக்கின்றன. அதிலும் கடந்த இரு வாரங்களாக இச்சம்பவங்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இக்காலப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாள்வெட்டு சம்பவங்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களினால் சுமார் பத்து பேர் காயமடைந்து சிகிச்சை...

வித்தியா கொலை வழக்கு: 13 ஆவது நபரை நீதிமன்றில் முற்படுத்தியது சி.ஐ.டி.!

வித்தியா கொலை வழக்கில் 13 ஆவது நபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தனிமையில் நீதிவான் வை.எம்.எம்.றியால் முன்பாக நேற்று முற்படுத்தினர். புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஒரு வருடம் கழிகின்ற நிலையில் 13 ஆவது நபர் ஒருவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். புங்குடுதீவை...

முதலமைச்சர் , ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளும் கட்சியினரே போர்க்கொடி!

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பொருளதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஆளும் கட்சியினரே முதலமைச்சர் விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை சபையில் நுழைய விடாமல் செய்வோம் எனப் போர்க்கொடி தூக்கினர். வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வு நேற்று நடந்தது. இதன்போது தொலைபேசி...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கவும்

யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு...

யாழில் வாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய தடை!!

சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை கம்­மா­லைகள் உற்­பத்தி செய்­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள யாழ்.மேல் நீதி­மன்றம், அவற்றை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாகக் கைய­ளிக்க வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது. யாழ்.குடா­நாட்டில் வாள்வெட்டுச் சம்­பவங்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அத்­துடன் ஆபத்­தான கத்­தி­களைக் காட்டி அச்­சு­றுத்தி கொள்­ளைகள் இடம்­பெ­று­வ­தை­ய­டுத்தே இந்த உத்­த­ரவை யாழ். மேல்...

பாரதூரமான குற்றச்செயல்கள்: யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி...

காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22...

இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கவலை!

இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ.நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அரசின் அழைப்பை ஏற்று ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் இரு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா...

வடக்கில் சமஷ்டியை கோரக் கூடாது என கூற எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை!

சாத்வீக போராட்டங்களை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும்...

கொக்கிளாய் விகாரை; காணி உரிமை சர்ச்சையால் நிறுத்த முடியாத நிலை

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தேடுதல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்...
Loading posts...

All posts loaded

No more posts