திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...

கழுத்தில் கத்திவைத்து படுகாடு தமிழ் விவசாயிகளுக்கு சிங்களவர்கள் அச்சுறுத்தல்

திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட படுகாடு விவசாயிகளை இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற சிங்களவர்கள் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளின் பின்னர் சிங்கள விவசாயிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது விவசாய நிலங்களிற்கு கடந்த திங்கட்கிழமை சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட...
Ad Widget

அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் அடாவடி!

கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு,...

பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது' என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

வித்தியா கொலை திட்டமிட்ட சதி!! வித்தியாவின் தாயார்

புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது. வடக்கு, கிழக்கையே கொதிக்க வைத்த வித்தியா விவகாரம் இப்பொழுது மெது மெதுவாக அடங்கிச் செல்கிறது. வித்தியாவிற்கான எழுச்சியில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கை கொலையாளிகளை அடையாளம்...

மாலைதீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களில் 3 தமிழ் இளைஞர்களும் அடக்கம்!

இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை...

தற்கொலை அங்கி விவகாரம்- ஜேர்மனியில் உள்ள இருவரைக் கைது செய்ய இன்டபோலிடம் உதவி!

சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மனியில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களைக் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து...

விக்கியை உடன் கைதுசெய்க! சம்பந்தனுக்கு எதிராகவும் போர்க்கொடி!!

"சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்."- இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளது கடும் போக்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும்...

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விவரத்தை 28ஆம் திகதி சமர்ப்பிக்கவேண்டும்! ஜனாதிபதி உத்தரவு

வடக்கு , கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பான விவரங்களின் தொகுப்பை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை நேரில் வெளிப்படுத்தியதுடன் காரசாரமாகப் பேசியுமுள்ளார். அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அத்தனை விவரங்களையும் முழுமைப்படுத்தி, அன்றைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி...

குடாநாட்டில் மட்டும் 118 இடங்களில் இராணுவத்துக்குக் காணிகள் பறிப்பு!

யாழ்.குடாநாட்டில் மட்டும், வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது. மேற்குறித்த காணிகளைப் படையினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த எண்ணிக்கையின் பிரகாரம் வலி. வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல...

ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல்...

வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்!

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் 23பேர் கைது!

நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில்...

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு துணைநிற்கின்றது!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...

தினேஸ் குணவர்த்தனவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்றபிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து சுயலாபங்களை பெற்றுக் கொள்ள முனையாதீர்கள் என்று தினேஸ் குணவர்த்தனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன,கடந்தகாலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்...

அழிவின் விளிம்பில் யாழ் குடாநாடு!

விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை,...

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்....

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள...

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு ஒருபோதும் வேண்டாம்!

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன்,...
Loading posts...

All posts loaded

No more posts