Ad Widget

முன்னாள் விடுதலை புலிகளின் கைதுக்கு காரணம் தற்கொலை அங்கிகள் மீட்பே!!

முன்னாள் விடுதலை புலிகளின் பிரதேசிய தலைவர்கள் சிலரை கைது செய்தமைக்கான காரணம், சமீபத்தில் வடக்கில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைவாகவே என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

பி.பி.சி வானொலிக்கு கருத்து தெரிவித்த அவர்,

குறித்த கைதுகளை  காவற்துறை பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டதாக  தெரிவித்திருந்தார்.

முன்னாள் விடுதலை புலிகளின் தலைவர்களில் ஒருவரான ராம் மற்றும் அவரின் கீழ் செயற்பட்ட நகுலன் ஆகியோர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் , இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி இதன் போது தெரிவித்திருந்தார்.

Related Posts