Ad Widget

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம்!

ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போர் முடிவுற்று பல ஆண்டுகளான பின்பும் நாட்டில் சமாதானம்...
Ad Widget

2009 மே 19இல் உயிருடனேயே இருந்தார் பிரபாகரன்!- பொன்சேகா

இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது...

ஆனையிறவு தாக்குதல் வழக்கு – சந்தேகநபர் விடுதலை

ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணிகளில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவரை, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23ம் திகதிகளில் ஆனையிறவு...

பிரபாகரன் எப்போது இறந்தார்?- சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...

கீரிமலையை அடுத்து யாழ்.திருவடிநிலையில் காணி சுவீகரிப்பிற்காக நில அளவை?

கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை...

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளுக்கு என்ன நடந்தது?

இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...

உண்ணாவிரத கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து...

சம்பந்தனின் கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மகஸீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக...

உண்ணாவிரதமிருந்த ஆறு அரசியல் கைதிகள் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதி!

தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை...

உயிருக்கு உத்தரவாதம்; விடுவிப்புக்கு பின்னடிப்பு! – உண்ணாவிரதக் கைதிகள் விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இருப்பினும், இந்தக் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும்...

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்களில் வட மாகாணத்திற்கு முன்னுரிமை!- ஜனாதிபதி

ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த...

அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இலங்கையில் நடந்த போரின் போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரின் போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், ​நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையே எதிர்க்கட்சித் தலைவர்...

தற்கொலை செய்த ஈழ அகதியின் கடைசி குரல்! : அகதிமுகாமில் உள்ளவர்களின் கண்ணீர் கதைகள்!!

‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...

தமிழ் – முஸ்லிம் பகுதியில் கடைகள் உடைப்பு!!

தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!! அனைவருக்கும் அழைப்பு

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியில் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உறவுகளை விடுவிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 7 மணிக்கு முனியப்பர் கோவில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்...

சித்திரைப் புத்தாண்டுக்கு ஒரு தொகுதி காணி விடுவிக்கப்படும்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி நிலப்பரப்பு எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி காணிகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாம...

யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாளை மீண்டும் காணி சுவீகரிப்பிற்கு நில அளவை

யாழ் மாவட்டத்தில் கடும் எதிர்ப்புக்களின் மத்தியில் நாளை செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் காணி அளவிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் ஏனைய வடக்கு மாகாணங்களிலும் இராணுவத்தின் தேவைக்காக...

போர்க்கால நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் மீண்டும் தலைதூக்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாரஹேன்பிட்டிய அபேராமையில் அமைந்துள்ள சுசரித்த தம்மா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
Loading posts...

All posts loaded

No more posts