Ad Widget

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பகுதியில் தனது வீட்டிலிருந்த சமயம் ராம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் வைத்து கலையரசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்றும் திருகோணமலையில் பாதுகாப்புப் படைத்தரப்பினர் மீதும் காவல்துறையினர் மீதும் நடாத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை போரின் கிழக்குப்பகுதியில் சாள்ஸ் அரன்ரனி படையணி தளபதி நகுலன் அவர்களும் இவர்களுடன் இணைந்து செயற்பட்டார் என நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts