Ad Widget

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அட்டகாசம்!

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வாள், கைக்கோடரி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்று நேற்று முன்தினம் வர்த்தக நிலையப் பணியாளர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பல்சர் வகை உந்துருளியில் சில்வர் கலர் கோடரி மற்றும் வாள்களுடன் ஒரு கும்பல் வந்து அப்பகுதியில் நின்ற வர்த்தகர்களுக்கு வாள்களை வீசி அட்டகாசம் புரிந்ததுடன் அருகிலிருந்த ஏரிஎம் காட் இல் பணம் எடுக்கவந்த பல்கலைக்கழக மாணவர்களின் தொலைபேசியையும் பணத்தினையும் பறித்துச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதனால் குறித்த வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. அத்துடன் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) உந்துருளி திருத்தும் கடை ஒன்றில் இருந்தவர் மீது வாள்வெட்டு நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts