கீரிமலை வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு, காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி, இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில், ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, முகாம்களில்...

நல்லாட்சியை கவிழ்ப்பதே இலட்சியம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலட்சியம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர்களின் சங்கத்துக்கு, கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Ad Widget

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்து கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களின் ஊடாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் 370 குடும்பங்களுக்கு...

‘வடக்கு ஸ்தம்பிக்கும்’ கடற்றொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை!!

“இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அடிபணிந்து, கோரிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தினால், வடபகுதி ஸ்தம்பிக்கும் வகையிலான பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்று, வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம், எச்சரிக்கை விடுத்தது. யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சம்மேளனம், மேற்கண்டவாறு குறிப்பிட்டது. “நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31), கொழும்பில் நடைபெறவிருந்த...

தேசிய அரசுக்கு த.தே.கூட்டமைப்பு காலக்கேடு

2017ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரையில் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடிவும் அமையும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச்...

ஒற்றையாட்சிக்குள் தீர்வு ஏற்படமுடியாது; இரா.சம்பந்தன்

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமஷ்டியைக் கோரவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட சில முக்கியமான அரசாங்க தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கணித்திருந்தார். இவ்விரு விடயங்கள் தொடர்பாக வினவியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...

வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தன், சுமந்திரன் விலகவேண்டும்!

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். 21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக...

இராணுவ அம்பியுலன்ஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த...

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த கடை உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடும்...

கருணை காட்டுங்கள்! கிளிநொச்சியில் கதறும் உறவுகள்

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில்...

யாழில் வாள் வெட்டு : மூவர் படுகாயம்

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் மூவர் காயமடைந்துள்ளனர். ​நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த வின்சன், முச்சக்கர வண்டி சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் வந்த...

கட்டளை கொடுத்தவரை அறிவதற்கு காத்திருக்கிறோம் : எம்.ஏ.சுமந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின்...

திட்டமிட்டபடி வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவு அமையவுள்ளது!

மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna) மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது....

ட்ரம்ப் அரசின் அறிக்கை இலங்கைக்கு பாதகமாக அமையுமென அச்சம்

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான...

விபத்தில் மூவர் பலி

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது!

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக்...

சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும்...

ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், நேற்று மட்டக்களப்பில், நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்...

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு சர்வதேச விசாரணையின் தேவையை எடுத்துக்காட்டியுள்ளது

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படைப் புலனாய்வு அதிகாரகிள் மூவர் உட்பட அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே...

வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது

12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக...
Loading posts...

All posts loaded

No more posts