யாழில் வாள் வெட்டு : மூவர் படுகாயம்

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் மூவர் காயமடைந்துள்ளனர். ​நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த வின்சன், முச்சக்கர வண்டி சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் வந்த...

கட்டளை கொடுத்தவரை அறிவதற்கு காத்திருக்கிறோம் : எம்.ஏ.சுமந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின்...
Ad Widget

திட்டமிட்டபடி வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவு அமையவுள்ளது!

மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna) மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது....

ட்ரம்ப் அரசின் அறிக்கை இலங்கைக்கு பாதகமாக அமையுமென அச்சம்

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான...

விபத்தில் மூவர் பலி

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது!

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக்...

சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும்...

ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், நேற்று மட்டக்களப்பில், நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்...

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு சர்வதேச விசாரணையின் தேவையை எடுத்துக்காட்டியுள்ளது

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படைப் புலனாய்வு அதிகாரகிள் மூவர் உட்பட அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே...

வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது

12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக...

மேலும் ஒரு முன்னாள் போராளி உயிரிழப்பு

வவுனியா புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இடை வழியில் அவர் உயிரிழந்த சம்பவம், சனிக்கிழமை (24)இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

ரவிராஜ் வழக்கு விவகாரம் : மேன்முறையீடு செய்ய முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் என்ற வகையில் தான் இந்த மேன்முறையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த...

ஏ9 வீதியிலேயே அதிகளவான விபத்துக்கள்! இந்த ஆண்டில் 117 பேர் பலி!

இந்த ஆண்டு ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும்,...

மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...

தமிழர் தாயகத்தில் ஏராளமான பௌத்த தொல்பொருள் இடங்கள்!! பாதுகாக்க நடவடிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏராளமான தொல்பொருள் ரீதியில் பெறுமதி மிக்க பௌத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்கப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரை அமர்த்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள பௌத்த தொல்பொருள் இடங்களை தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து அழித்து வருவதாக பொதுபல சேனா உட்பட...

போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும், இந்த வீட்டுத் திட்டத்தைப் பெற பொருத்தமானவர்கள் என சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள முன் நிர்மாணிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலையே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,...

ரவிராஜ் கொலை வழக்கு: சகலரும் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் சபை அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன்...

வடக்கு மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிட வசதி

வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு...

பிரதமருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டேன்!

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்புத் தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் எவ்வாறு கலந்துகொள்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று இன்று...

மாணவர்கள் மீது வாள் வெட்டு

தனியார் கல்வி நிலையத்துக்கான விளம்பர பதாதைகளை ஒட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, புதன்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் வந்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுச் சென்றுள்ளனர். இதில் ஒரு மாணவன்...
Loading posts...

All posts loaded

No more posts