சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி...

ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் தினத்தன்று விடுவிக்கப்படும்

வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும்,...
Ad Widget

இலங்கையை தமிழர்களே ஆட்சி செய்தார்கள் : அரசியல் ஆய்வாளர் அறிக்கை

பௌத்தரான ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழி பேசுகின்ற திராவிட இனங்கள் வாழ்ந்து வந்தன என்பதற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன எனவும் அவைகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் மட்டக்களப்பு பிரஜைகள் முன்னணி தலைவரும் அரசியல் ஆய்வாளருமான வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைக்கு தடை விதிப்பு!

எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

வழக்குத் தீர்ப்பு முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது! : ராவிராஜ் குடும்பத்தினர்

வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம்...

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை முறையான அறிக்கையின்றி ஒத்திவைப்பு!

சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...

சுன்னாகம் கொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை மறுப்பு

சுன்னாகத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களது, பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ்...

யாழில் மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம்! மூவர் படுகாயம்!!

பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை...

யாழில் மீண்டும் வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார். இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த...

ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது, புதிய அரசும் தேவையில்லை ; ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோடிய மகிந்த நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசாங்கம் அச்சமடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது....

தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது!

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே...

சட்டமா அதிபர்மீது குற்றம் சுமத்தியுள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து,...

சமஸ்டி, வட,கிழக்கு இணைப்பு இன்றிய தீர்வை ஏற்க வேண்டாம்!! சம்பந்தனிடம் வலியுறுத்து

சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....

யாழில் காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தவர்களுக்கு பிணை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள்: அரசின் கருத்திற்கு ஐ.நா. மறுப்பு

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற கருத்தை ஐ.நா. முற்றாக நிராகரித்துள்ளது. யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி...

போர் வெடிக்கும்! கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான...

மாவீரா் துயிலுமில்லத்தில நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர்...

ரவிராஜின் தீர்ப்பில் சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார் ராஜித சேனாரத்ன

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்...

யாழில் பெண்களிடம் சில்மிஷம் செய்த பொலிஸ் புலனாய்வாளருக்கு எதிராக முறைப்பாடு

யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...
Loading posts...

All posts loaded

No more posts