Ad Widget

சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்: சம்பந்தன்

இந் நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் இது தனது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ரீதியாக வழங்கப்படுகின்ற அரசியல் தீர்வின் ஊடாக நாட்டில் வாழும் சகல மக்களதும் இறைமை மதிக்கப்பட வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகுமென தெரிவித்த சம்பந்தன், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டமைப்பு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமென மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியல் யாப்பை பொறுத்தளவில் ஒற்றையாட்டி, சமஷ்டி, வடக்கு – கிழக்கு மீள் இணைப்பு என்பன குறித்து பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதை சம்பந்தன் சுட்டிக்காட்டியதோடு, அரசியல் சாசன உருவாக்கத்தின்போது சர்ச்சைகளும் கேள்விகளும் எழுவது சகஜம் என்றும் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Posts