அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...

எமது மக்களை நாமே ஆளக்கூடிய உரிமையினை ஏற்படுத்துவோம்: சுமந்திரன்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்...
Ad Widget

ஐநாவில் தமிழர் விவகாரத்தை பிற்போடுவதற்கு அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்றது!

ஐநாவில் சிறீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஐநாவைக் கோரியுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி எமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையெனவும், ஒற்றையாட்சியின் கீழே தீர்வு கிடைக்கும் என்பதும் நன்றாகவே புலப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு: மேன்முறையீட்டு மனு தள்ளுபடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மல்லாகத்தில் ரயிலுக்கு கல்வீச்சு!! ஓட்டுநர் வைத்தியசாலையில்

மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்...

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி யாழ். நல்லூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...

எழுக தமிழ் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...

அரசியல்வாதிகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது

'அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால், வடக்குக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான, இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியல்வாதிகளுக்குள் இருக்கும்...

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய்....

சிரேஸ்ட வைத்திய அதிகாரிகளின் அடாவடி! பெண் வைத்தியர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு...

58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

இலங்கைக்கு GPS+ வரிச்சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு மிகப்பாரதூரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அரசதகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கை ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...

காணாமல்போன கணவன், மனைவி! கட்டுண்டு மயங்கிய நிலையில் கணவர் மட்டும் மீட்பு

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலமை ஏற்படும்

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது, அதிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சனைக்கு...

கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...

சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்: சம்பந்தன்

இந் நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் இது தனது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ஜனாதிபதி

தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்- ”நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம்...

ஈபிடிபி கட்சி உறுப்பினர்களை நாடுகடத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை!

ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்றவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான இரட்டைக் கொலைவழக்கு விசாரணையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியினர் இருவரையும் பிரித்தானியாவிலிருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்துமாறு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைசெய்துள்ளார். தூக்குத் தண்டனைகளில் தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்கவேண்டும் என்ற நடைமுறைக்கமைய,...

கரையோரமும், காணியும் மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாண வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14) ஊறணி...

கடுமையான வரட்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் இலங்கை!

கடுமையான வரட்சியை நாடு எதிர்க்கொள்ளவுள்ள நிலையில், நீரையும், மின்சாரத்தையும் இயன்றளவு சிக்கனமாக உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘எதிர்வரும் மூன்று மாத...

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts