கொட்டும் மழையிலும் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்: இளைஞர்களும் ஆதரவு

கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொட்டும் மழையில் குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள...

பிள்ளையானின் உத்தரவில் பரராஜசிங்கம் கொலை;சட்டமா அதிபர் திணைக்களம்

ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேரத்துரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவரே இந்தப் படுகொலையை புரிந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
Ad Widget

உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் தகவல் திட்டிய பொலிஸார்

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட தளத்திற்கு வருகை தந்த பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் தகவல்களை சேகரித்துள்ளனர். நேற்றய தினம் இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்ட நிலையில், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது. இந்தநிலையில், நேற்று மாலை (24) போராட்ட தளத்திற்கு சென்ற...

தனிமையில் இருந்த கர்ப்பிணிப் பெண் வெட்டிக்கொலை; இருவர் கைது

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த...

ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய ஆதரவை காணாமல் போனோர் விவகாரத்திற்கும் வழங்குங்கள்

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்காத நிலையில், அண்மையில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கியதைப் போன்று காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில்...

கரவெட்டி இளைஞன் ஆபிரிக்காவில் அடித்து கொலை!

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (23) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது,...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிலர் கமராவுடன் வருகை தந்து அவர்களை புகைப்படம் எடுத்துள்ளதோடு, அச்சுறுத்தலும் விடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்து...

இலங்கை கொடுத்தாலும் இந்தியா வாங்கத் தயாரில்லையாம்!

திருகோணமலைத் துறைமுகத்தின் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து விஜயத்தின் போது, இந்திய...

திருமலை மக்களும் போராட்டத்தில் குதித்தனர்

கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போன உறவுகள் தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் முதல்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அரசு உடன் ரத்துச் செய்ய வேண்டும்

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக சென்று வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...

தரம் 6 மாணவியின் பாடசாலை அனுமதிவிடயத்துக்கு சுமூகமான தீர்வு

கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...

உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்!

கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடப்போவதாக அறிவித்துள்ள அச்சங்கத்தினர் அது தொடர்பான கடிதத்தினை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த உணவுத்...

பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்! சுனாமி ஏற்படுமா என அச்சம்

பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி அச்சம் எழுந்துள்ளது. புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின்...

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

வட மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த...

எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம்: ஜனநாயகப் போராளிகள்

தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த கால...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

இறக்குமதி அரிசியை 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது

இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க...

மனித உரிமை விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர்...
Loading posts...

All posts loaded

No more posts