58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

இலங்கைக்கு GPS+ வரிச்சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு மிகப்பாரதூரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அரசதகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கை ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...

காணாமல்போன கணவன், மனைவி! கட்டுண்டு மயங்கிய நிலையில் கணவர் மட்டும் மீட்பு

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...
Ad Widget

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலமை ஏற்படும்

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது, அதிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சனைக்கு...

கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...

சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்: சம்பந்தன்

இந் நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் இது தனது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

சமஷ்டிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ஜனாதிபதி

தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்- ”நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம்...

ஈபிடிபி கட்சி உறுப்பினர்களை நாடுகடத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை!

ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்றவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான இரட்டைக் கொலைவழக்கு விசாரணையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியினர் இருவரையும் பிரித்தானியாவிலிருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்துமாறு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைசெய்துள்ளார். தூக்குத் தண்டனைகளில் தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்கவேண்டும் என்ற நடைமுறைக்கமைய,...

கரையோரமும், காணியும் மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாண வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14) ஊறணி...

கடுமையான வரட்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் இலங்கை!

கடுமையான வரட்சியை நாடு எதிர்க்கொள்ளவுள்ள நிலையில், நீரையும், மின்சாரத்தையும் இயன்றளவு சிக்கனமாக உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘எதிர்வரும் மூன்று மாத...

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி...

ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் தினத்தன்று விடுவிக்கப்படும்

வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும்,...

இலங்கையை தமிழர்களே ஆட்சி செய்தார்கள் : அரசியல் ஆய்வாளர் அறிக்கை

பௌத்தரான ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழி பேசுகின்ற திராவிட இனங்கள் வாழ்ந்து வந்தன என்பதற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன எனவும் அவைகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் மட்டக்களப்பு பிரஜைகள் முன்னணி தலைவரும் அரசியல் ஆய்வாளருமான வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைக்கு தடை விதிப்பு!

எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

வழக்குத் தீர்ப்பு முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது! : ராவிராஜ் குடும்பத்தினர்

வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம்...

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை முறையான அறிக்கையின்றி ஒத்திவைப்பு!

சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...

சுன்னாகம் கொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை மறுப்பு

சுன்னாகத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களது, பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ்...

யாழில் மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம்! மூவர் படுகாயம்!!

பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை...

யாழில் மீண்டும் வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார். இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த...

ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது, புதிய அரசும் தேவையில்லை ; ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோடிய மகிந்த நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசாங்கம் அச்சமடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது....
Loading posts...

All posts loaded

No more posts