Ad Widget

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஒருவர் மயக்கம்!

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கமுற்று விழுந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 14பேர் இன்றுடன் நான்காவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த வைத்தியர் குழு இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயார் ஒருவர் நேற்று மாலை மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஏனையோர் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Posts