Ad Widget

கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்தவர்களை எதிர்வரும் 8ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்தவர்களால் பகல் 11.00 மணியளவில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது-30) நாகேந்திரன் துஷியந்தன் வயது -32) ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் றியால் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts