ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை: நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐ.நா கோரிக்கை

ஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம்...

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் நேற்றைய தினம் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப்...
Ad Widget

மாணவர்கள் இருவர் படுகொலை : குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு...

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...

காணாமல் போனவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

லங்கையில் காணாமல் ​போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள்...

உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு பெருகி வருவதாக அறியமுடிகின்றது. வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும்  இன்று உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக அறவழிப் போராட்டமொன்றும் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு ஆதரவாக மதத்தலைவர்கள் , பிரதேசவாசிகள் , அரசியல் பிரமுகர்கள் என...

உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பேரணி

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகரை சென்றடைந்து தற்போது உண்ணாவிரதம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர்...

காணாமல் போனோருக்கு ஆதரவாக நல்லூரில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்.நல்லூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் கைதுசெய்யப்பட்டு காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இவ் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...

காணாமல் போனோரை தேட முடியாடு! மரண சான்றிதழ் வழங்கவும் முடியாது: ராஜித

காணாமல் போனோர் குறித்த ஒரே தீர்வு அவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாகுமென தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, காணாமல் போனோரை தேடுவது சிக்கலான விடயம் என்றும் அனைவரும் இறந்துவிட்டதாக மரண சான்றிதழ் வழங்கவும் முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...

தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்

தமிழர் தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறும் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள...

கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்தவர்களை எதிர்வரும் 8ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில்...

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஒருவர் மயக்கம்!

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கமுற்று விழுந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 14பேர் இன்றுடன் நான்காவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த வைத்தியர் குழு இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயார்...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருக்கும் உறவுகளின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும், காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் இன்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியிலுள்ள தபாலகத்திற்கு முன்பாக தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போன உறவினர்களில்...

வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத...

இராணுவத்தின் எச்சரிக்கையை உடைத்தெறிந்து கேப்பாப்புலவு மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்கின்ற நிலையில் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்....

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை : கண்கண்ட சாட்சியமாக சிறுவன்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது, சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம்...

நாவற்குழியில் சிங்களவர்களுக்கு வீடமைத்து கொடுத்தால், போராட்டம் வெடிக்கும்!! சிவாஜிலிங்கம்

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால் , நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாவற்குழியில் எதிர்வரும் 30ம் திகதி மானிய அடிப்படையில் வீடமைத்து...

உண்ணாவிரதம் இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படின் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும்: த.தே.கூ.

கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள உறவுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ள நேரிடும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

கொட்டும் மழையிலும் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்: இளைஞர்களும் ஆதரவு

கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொட்டும் மழையில் குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள...

பிள்ளையானின் உத்தரவில் பரராஜசிங்கம் கொலை;சட்டமா அதிபர் திணைக்களம்

ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேரத்துரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவரே இந்தப் படுகொலையை புரிந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts