இந்த நாட்டுக்கே விடுதலையைப் பெற்றுத்தந்த ஒரு மாபெருந் தலைவன்தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நேற்று மகிந்த ஆதரவான கூட்டு எதிரணியின் புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில், இன்று ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை ஒருவராலுமே மறக்கமுடியாது.
உலகத்திலே அழிக்க முடியாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து, இன்று இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபெரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் மேலும் தெரிவித்தார்.