Ad Widget

புனர்வாழ்வளிக்கப்படாத 300 புலிகள் வடக்கில்!

வடக்கில் புனர்வாழ்வளிக்கப்படாத 300 விடுதலைப் புலிகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத 300 விடுதலைப் புலிகள் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர் என இராணுவத்தினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னதாகவும் வடக்கில் குற்றச் செயல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுக்கு உட்படாத முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts