- Saturday
- June 21st, 2025

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள் முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன...

மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகாரசபையின் தலைவராகவும் 2009-13 காலப்பகுதியில் HSBC வங்கியில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் தொழிற்பட்டிருந்தார் மேலும் எமிரேற்ஸ் NDB...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது...

அமைச்சரவை அந்தஸ்துள்ள இருபத்தைந்து அமைச்சர்கள், பத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள், இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் என அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இருந்த சிலருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகள்...

உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் நாட்டு...

2015 சனாதிபதி தேர்தலில் 4 லட்சத்து 49072 வாக்குகளால் மைத்திரி வெற்றி பெற்றுள்ளார்.அவ்வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார். அந்த விளம்பரத்தினை தந்தவர்களது விபரத்தினை தருமாறு அவர் கடிதமூலம் தொலைக்காட்சிக்கு கேட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில்...

சனாதிபதி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரச்சாரங்கள் பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுவருகின்றன. முகப்புத்தகம், இணையத்தளம் , தொலைபேசி ,கைத்தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்க கைத்தொலைபேசியில் இருந்து மகிந்தவுடன் SMS வசதி ஊடாக மகிந்தவுடன் உரையாடும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. கைத்தொலைபேசியில் MR என ரைப் செய்து 2468 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம்...

பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை – விக்கி
சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கான ஆண்டுஇறுதி கருத்துப் பரிமாற்றக் கூட்டம் யாழ் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை மாலை 5 மணியளவில்...

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின. இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நகரில் உள்ள...

டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கு என்ன செய்துவிட்டார். அமைச்சரவையில் வாயில் புட்டு அடைந்தவர் போல் இருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்ச...

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில்...

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு எந்தவிதமான ஒப்பந்தங்கள், நிபந்தனைகள் இன்றி எங்களுக்குஆதரவு வழங்கியுள்ளனர். நாம் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுமில்லை, கைச்சாத்திடவுமில்லை. நாம் அனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம்.என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்றைய தினம் மாலை 4 மணியளவில் யாழ்.வருகை தந்த மைத்திரிபால சிறிசேன கிட்டுப்பூங்காவில் நடைபெற்ற பொது...

முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத்...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை...

இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்...

All posts loaded
No more posts