ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு: பிரதமர் ரணில்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...

பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...
Ad Widget

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா!

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...

கிழக்கு மாகாண ஆட்சி ! மு.காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

தேசிய நிறைவேற்று சபை நியமனம்: சம்பந்தன் உள்ளடக்கம்! –

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு...

சம்பந்தன் குழுவால் பல கோரிக்கைகள் முன்வைப்பு!

ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பின் போது, தேசிய...

புதிய அமைச்சரவை

இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. 1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம் 4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் 5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தது! கட்சிக்கு 2தலைவர்கள் நியமனம்!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்சியின் தலைவர் பதவியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.   கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்துள்ளதாக கட்சியின் ஒரு தெர்குதி உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.எனினும், கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றமில்லை என கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட...

கட்சி தாவிய த.தே.கூ எம் பி பியசேன சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரினார்!

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள்  முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து...

சு.கவின் தலைவராக மைத்திரிபால சிறிசேன! போசகராக சந்திரிகா!?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை இறுதி முடிவுகள்  வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியுள்ள நிலையில் இந்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மைத்திரிபால சிறிசேன...

நிதி அமைச்சின் செயலாளராக அருச்சுண் மகேந்திரன்

மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முதலீட்டு அதிகாரசபையின் தலைவராகவும் 2009-13 காலப்பகுதியில் HSBC வங்கியில் முகாமைத்துவ பணிப்பாளராகவும் தொழிற்பட்டிருந்தார் மேலும் எமிரேற்ஸ் NDB...

கோத்தா , பசில் ,தொண்டமான் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான...

அனந்தி மற்றும் சிவகரன் நீக்கப்பட்டார்கள் என்ற செய்தி உண்மை இல்லை

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்   தெரிவித்தார். எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது...

25 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட உள்ளது!

அமைச்சரவை அந்தஸ்துள்ள இருபத்தைந்து அமைச்சர்கள், பத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள், இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் என அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இருந்த சிலருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகள்...

மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: பதவி ஏற்பின் போது மைத்திரி

உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் நாட்டு...

449072 வாக்குகளால் மைத்திரி வெற்றி!

2015 சனாதிபதி தேர்தலில் 4 லட்சத்து 49072 வாக்குகளால் மைத்திரி வெற்றி பெற்றுள்ளார்.அவ்வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

வடக்கு கிழக்கு மகிந்தவை முற்றாக நிராகரித்தது

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!      

டாண் தொலைக்காட்சியில் விளம்பரம் -அனந்தி மறுப்பு

யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார். அந்த விளம்பரத்தினை  தந்தவர்களது விபரத்தினை தருமாறு அவர் கடிதமூலம் தொலைக்காட்சிக்கு கேட்டிருக்கின்றார்.

மைத்திரி அரசு அமைந்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்! – தமிழ் தேசிய கூட்டமைப்பு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில்...

மகிந்தவுடன் SMS இல் உரையாடலாம்

சனாதிபதி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் பிரச்சாரங்கள் பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுவருகின்றன. முகப்புத்தகம், இணையத்தளம் , தொலைபேசி ,கைத்தொலைபேசி,  மின்னஞ்சல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என பல்வேறுவடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்க கைத்தொலைபேசியில் இருந்து மகிந்தவுடன் SMS வசதி ஊடாக மகிந்தவுடன் உரையாடும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. கைத்தொலைபேசியில் MR என ரைப் செய்து 2468 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம்...
Loading posts...

All posts loaded

No more posts