Ad Widget

கட்சி தாவிய த.தே.கூ எம் பி பியசேன சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரினார்!

சுதந்திரக்கட்சிக்கு கட்சி தாவிய அம்பாறை மாவட்ட த.தே.கூ எம்பி பியசேன சனாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள்  முன்னால் த.தே.கூ எம்பி சந்திரகாந்தனிடம் அடைக்கலம் கோரியதாக சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் கூடியிருந்த இளைஞர்களும், ஆதரவாளர்களும் முன்னிலையில் மன்னிப்பும், அடைக்கலமும் கோரி தனது ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் முடிவுகளின் பின் தன்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

இருப்பினும் தான் அவரை பண்பாட்டுக்கமைவாக உபசரித்து பாதுகாப்பாக வெளியேற்றி வைத்ததாகவும் தேர்தல் முடிவுகளின் பின் அவர்  தப்பிசென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

piyasena

 

இதே வேளை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் புஸ்பகுமார் வீட்டை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையிலான 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்றிணைந்து சுற்றிவழைத்தனர்.
அத்துடன், அவரை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வீட்டுக்குள் உள்நுழைந்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது அவர் அங்கிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் தப்பி ஓடியுள்ள சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து தம்பிலுவில் மத்திய சந்தை வீதியிலுள்ள இனியபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் உள்நுழைந்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அவரை, அவரின் மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸார் பாதுகாப்புடன் அகற்றியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதேவேனை த.தே. கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினரான பி.எச்.பியசேனவின் வீட்டின் மீது பட்டாசுகளை வீசி பொதுக்கள் வெடிக்கவைத்ததுடன் சுதந்திரக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ரகுபதியின் வீட்டை முற்றுகையிட்டபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இவ்வாறே த.தே.கூ. இருந்து கட்சி தாவிய ஆலையடிவேம்பு பிரததேச சபை உறுப்பினர் தியாகராசா மற்றும் கட்சி தாவிய வடிவேல் ஆகிய இருவரும் அவர்களது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இவர்களது வீடுகளுக்கு சென்ற பொதுமக்கள் வீடு பூட்டியிருப்பதை அடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து நாடானமன்ற உறுப்பினர் பியசேனா மற்றும் இனியபாரதி ஆகிய இருவரது வீட்டை சுற்றி இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts