Ad Widget

கோத்தா , பசில் ,தொண்டமான் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் எமிரேட்ஸின் ஈ.கே.349 விமானத்தில் தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று காலை 6.45 மணியளவில் சென்னை சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 171 என்ற  விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்னையைச் சென்றடைந்துள்ளார்.   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தால் தான் நாட்டைவிட்டு வெளியேறுவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ச தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டவேளையிலேயே மலேசியாவுக்கு விமானம் மூலம் வெளியேறிந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts