Ad Widget

அனந்தி மற்றும் சிவகரன் நீக்கப்பட்டார்கள் என்ற செய்தி உண்மை இல்லை

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்   தெரிவித்தார்.

எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது குறித்து பலர் கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்த கட்சியின் செயலாளர், அது குறித்து அவர்களிடம் விளக்கம் கோரத் தீர்மானித்திருப்பதாகவும் இதுவரை அதுகுறித்த கடிதங்கள் அனுப்பப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

முதலில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டு, பின்னர் விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டு, அந்த அறிக்கை மத்திய குழுவிடம் சமர்பிக்கப்பட்டு இறுதியாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் மாநாட்டின் முழுமையான வடிவம்

Related Posts