வித்தியா கொலை வழக்கின் அடுத்த கட்டம்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வித்தியா கொலை வழக்கின், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில்...

வெளிநாடுகளில் கல்விகற்க வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. திகுவி கல்விச் சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வடக்கு மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன்...
Ad Widget

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் தீக்கிரை: பெண் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பரவிய தீ காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த...

போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது : டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் இன்னமும் தேவைப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற...

கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பொது சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள்,...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் வடக்கு

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடமாகாணம் தழுவிய மாபெரும் போராட்டமொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான...

இலங்கையின் தாமதம் குறித்த விமர்சனங்களுடன் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை?

ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் தாமதம் தொடர்பிலான விமர்சனங்களை உள்ளடக்கியதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், எதிர்வரும் மார்ச்...

யாழில் சைட்டத்திற்கு எதிராக போராட்டம்!

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியும் பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. ‘சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண்’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பித்த பேரணி வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தது. அங்கு சைட்டத்திற்கு எதிரான பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும்...

அடுத்த ஜனாதிபதியாக ரணிலே வரவேண்டும்: விஜயகலா

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருதற்கு பெண்கள் அதிகம் பங்களிப்பு வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பிரதேச, மாகாண சபை தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கெதிராக வாக்களித்தவர்களை வடக்கு, கிழக்கு மலையகத்தில் உள்ள...

எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்கள்: பிரதமர் உறுதி!

எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுமிக்கதாக உருவாக்குவதே தமது நோக்கம். விரைவில் அதனை மேற்கொள்வோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அது போன்று பொருளாதாரத்தை வலுப்படுத்த...

நடைமுறைக்கு வருகிறது உக்கக்கூடிய பொலித்தீன்: இலங்கை வாழ் மக்கள் மகிழ்ச்சி

பொலித்தீன்களை தடைசெய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு மாற்றீடாக, உக்கக்கூடிய பொலித்தீன் வகையொன்று இனங்காணப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பொலித்தீன் 100 நாட்களுக்குள் உக்கி அழியக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொலித்தீனை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை...

அரசியல் கைதிகள் விடயத்தில் பார்வையாளர்களாக அன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும், பல்வேறு கடிதத் தொடர்புகள் மூலமாகவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான சில விபரங்களை வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் கோரியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும் முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்தார் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை...

முகமாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவா் காயம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பளை இந்திராபுரம் எனும் புதிதாக மீள் குடியேற்றம் செய்த இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது மர்மபொருள் வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனா்....

பெண்களின் நிலையை உயர்த்த அஞ்சி நடுங்க வேண்டியதில்லை : அனந்தி

வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியேழுப்ப முடியாத நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்று மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும்,தொழில் முனைவோரும், மேன்பாடும், வார்த்தகமும், வாணிபம்...

இலங்கையின் முதல் பெண் நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள பதவியேற்பு

இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். சட்டத்தரணியான இவர்...

கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றம் : முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார். குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே...

இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...

இலங்கை அணிக்கு தலைவராக சாமர கப்புகெதர

இலங்கை கிரிக்கட் அணிக்கு தலைவராக சாமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுடனான அடுத்த இரண்டு போட்டிகளுக்கே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினாலேயே சாமர கப்புகெதர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு...

விஜயகலாவை கைது செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...

வவுனியாவில் பண்டார வன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் 214 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த அனுஷ்டிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரின் நினைவுத்தூபிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நினைவுத்தூபியினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் மலர் மாலை...
Loading posts...

All posts loaded

No more posts