Ad Widget

இலங்கை அணிக்கு தலைவராக சாமர கப்புகெதர

இலங்கை கிரிக்கட் அணிக்கு தலைவராக சாமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுடனான அடுத்த இரண்டு போட்டிகளுக்கே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவிற்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினாலேயே சாமர கப்புகெதர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்த காரணத்திற்காக உபுல் தரங்கவிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts