Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் வடக்கு

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடமாகாணம் தழுவிய மாபெரும் போராட்டமொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்றைய தினத்தில் கட்சி பேதங்களை அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்றைய போராட்டம் பாரிய மக்கள் போராட்டமாக காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, தமிழகத்திலும் போராட்டங்களை நடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு ஆதரவு வழங்குமாறு தாய் தமிழக உறவுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts