Ad Widget

யாழில் சைட்டத்திற்கு எதிராக போராட்டம்!

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியும் பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.

‘சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண்’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பித்த பேரணி வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தது.

அங்கு சைட்டத்திற்கு எதிரான பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts