Ad Widget

எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்கள்: பிரதமர் உறுதி!

எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை வலுமிக்கதாக உருவாக்குவதே தமது நோக்கம். விரைவில் அதனை மேற்கொள்வோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அது போன்று பொருளாதாரத்தை வலுப்படுத்த தனியார் உற்பத்திகள் மிக அவசியமானதாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Posts