Ad Widget

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் தீக்கிரை: பெண் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடத்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பரவிய தீ காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தீப்பரவல் ஏற்பட்டு தீ வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக தீயினால் கடையில் இருந்த பொருட்கள் முழுமையாக தீக்கிரையானதுடன், வீட்டு பாவணை பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் பெண் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts