- Monday
- May 11th, 2026
படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில்...
இளைய தலைமுறையினரின் தலைமைப் பண்பை விருத்திசெய்யும் முகமாக மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினதும், கோப்பாயில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும் பங்களிப்பு இருக்க வேண்டுமென முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தத் துயிலுமில்லங்களுக்கான செயற்பாட்டுக் குழுவை அமைக்கும்போது தமது வேண்டுகோளை கருத்திற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த பாலிப்போடி சின்னத்துரை (யோகா), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக, மனித உரிமை மீறல் தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியமென ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒன்பது நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்...
மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் இன்று (11) மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,...
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையினைத் தடுக்கும் பொருட்டும், சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும். அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும்...
வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...
இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த...
மக்களின் தேவைகள், அபிலாசைகளைப் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துகின்றது எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுயநலம் கொண்ட சுமந்திரனும் அவரின் அடியாட்களும் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகள் கொண்ட அமைப்பல்ல. அது பதிவு செய்யப்பட்ட...
யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்ததில் அதனை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர். யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலையே இச் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த திருமணத்திற்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் என்பவற்றை மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம்...
இலங்கையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்படவேண்டும். இந்தியா அதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைத்துவம் உருவாகும். என்னால் சமாளிக்க முடியாத புதியதொரு போக்கு வடகிழக்கில் ஏற்பட்டுவிடும் என்று நான் பயப் படுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி நேற்று (திங்கட்கிழமை) எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்றது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள்...
யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “கடந்த அரசாங்கம் வவுனியாவின்...
தமிழ் மக்களுக்கு பணியாற்ற தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு, லங்கா சமசமாஜ கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு...
வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...
உடுவில் பகுதியில் வாள்களுடன் பயணித்தார்கள் என்ற குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மோட்டார்...
பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்துறை-...
நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர்...
நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல்,...
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியர் சடலங்களாக மீட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய வீடமைப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (8) மாலை இளம் தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டனர். வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தம்பதியரான 25...
Loading posts...
All posts loaded
No more posts
