மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி நேற்று (திங்கட்கிழமை) எவ்வித அறிவித்தல்களும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் இடம் பெற்றது.
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதினால் நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் நேற்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை. குறிப்பாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் அங்கு செல்லாததன் காரணமாகவே அகழ்வுகள் இடம் பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில் அவ்வளாகத்தில் 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.