Ad Widget

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தவகையில் ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 161 ரூபாவாகவும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 149 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேபோன்று சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 133 ரூபாவாகும் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 123 ரூபாவென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 123 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், யூரோ கு ரக சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts