Ad Widget

இளம் தம்பதியர் சடலமாக மீட்பு!

வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் தம்பதியர் சடலங்களாக மீட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை (8) மாலை இளம் தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தம்பதியரான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த இருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் கணவன் மனைவிக்கு அருகே சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts