நில, நீர் வளங்களை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது – முதலமைச்சர்

வடமாகாணத்தில் முக்கிய பிரச்சினையாக இராணுவம் தமது நீர் மற்றும் நில வளங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜெயலலிதாவுக்கு சம்பந்தன் கடிதம்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை 27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைத்துள்ளார். (more…)
Ad Widget

கைத்தொலைபேசிகளை பதிவு செய்ய வேண்டும், தொலைத்தொடர்பு ஆணைக்குழு கோரிக்கை

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். (more…)

இணையத்தளங்களை ஆராய தனிப் புலனாய்வுப் பிரிவு

அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராயப் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. (more…)

தந்தையின் பெயரில்லாதும் பிறப்பு சான்றிதழ் பதியலாம்

"தந்தையின் பெயர் குறிப்பிடாமலும், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது'' இவ்வாறு தெரிவித்துள்ளார் மாவட்டப் பதிவாளர் பி.பிரபாகர். (more…)

போர் முடிந்தும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் முடியவில்லை – விவசாய அமைச்சர்

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. (more…)

முதலமைச்சர் வரலாற்று தவறிழைத்துள்ளார் -யாழ். மாநகர மேயர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

ஊடகவியலாளர்களுக்கு தடை

செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (28) தெரிவித்துள்ளார். (more…)

ஆஸி தூதுவர் – வட மாகாண முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இன்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

அல்வாய் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு – சுகிர்தன்

வடமராட்சி அல்வாய், திக்கம் பகுதியில் பொதுமக்களிற்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியினை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (28) நில அளவையாளர் மூலம் அளவீடுகள் செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். (more…)

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை (28) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியது. (more…)

வடமாகாணசபை உறுப்பினரின் வீடு இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

வட மாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையின் வீடு, இன்று புதன்கிழமை (28) இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரங்களாக சோதனையிடப்பட்டுள்ளது. (more…)

உகண்டா வெளிவிவகார அமைச்சர் யாழ்.விஜயம்

உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர். (more…)

இணைய பாவனைக்கு தனியான சிம் அட்டையினை பயன்படுத்துங்கள்

இணையத்தின் ஊடாக வங்கி சேவைகளை பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை…!

வடமாகாண ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உறுதியளித்துள்ளனர். (more…)

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது, இன்று முதல் சேவையில்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யாழ்.மாவட்ட ரீதியாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தத்துக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது. (more…)

வெடி கொளுத்துவதில் முரண்பாடு, நால்வர் படுகாயம்!

துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1400 தாதியர்கள் தேவையாகவுள்ள போதும் தற்போது 395 தாதியர்களே கடமையாற்றுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

நோயாளி ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு!

கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் (more…)

யாழில் 100 ஆசிரியர்கள்வரை மனநோயாளிகள் – குருகுலராஜா

யாழ். மாவட்டத்தில் 100 ஆசிரியர்கள் வரை மனநோயாளிகளாக உள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts