மீண்டும் தொடங்குகிறது மருதநாயகம், அறிவித்தார் கமல்!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சுவையான பதிலை கூறியுள்ளார். இப்படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், லண்டனில்...

பிகே ரீமேக்கில் விஜய்?

விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார். மேலும் பிகே படத்தை தமிழில்...
Ad Widget

பக்கச்சார்பாக நடக்க வேண்டாம்; யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு அறிவித்தல்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள்...

நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை...

வவுனியாவில் வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரணப் பணிகள்

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம்தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான...

ஏயார் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதி கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்?

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏயார் ஏசியா (Air Asia) விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசார்னஸ்...

தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி இது. இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16...

யாழ். இந்தியத் தூதரகத்தின் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை...

இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை பெற்றது. பதில் அளித்த இலங்கை 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பின்னர் பொலோன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களைப்...

சல்மான கான் தலைமையிலான குழு வந்தடைந்தது

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே...

கூட்டமைப்பின் முடிவு நாளை!ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்து பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த முடிவு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித்...

எதிரணியின் வடக்குக்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் 30இல் ஆரம்பம்

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வடக்குக்கான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. 30ஆம் திகதி காலையில் மன்னாரிலும், மதியம் வவுனியா கலைமகள் வித்தியாலயத்திலும், பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பிலும் இந்த பரப்புரைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,...

8 நாட்களில் 24பேர் பலி : 10 இலட்சம் பேர் பாதிப்பு

ஒன்பது மாகாணங்களில் காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் தவிர, 22 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 24பேர் உயிரிழந்துள்ளதுடன் 281,767 குடும்பங்களைச் சேர்ந்த 1,016,749பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் வெள்ளம்,...

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...

162 பேருடன் மாயமான விமானம்; வான்வழித் தேடல்கள் இடைநிறுத்தம்

இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் பறந்த வழியில் காணாமல்போயுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை வான் வழியாக தேடும் பணிகளை, இரவு சூழ்ந்துவிட்டதால் இந்தோனேஷியா இடைநிறுத்தியுள்ளது. போர்னியோவுக்கு தென்மேற்காகவுள்ள கடற்பரப்பில் விமானம் தொடர்பை இழந்திருந்த இடத்தில், இந்தோனேஷியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கிளம்பிய இராணுவ விமானங்கள் தேடிவந்தன. மோசமான வானிலை நீடித்தாலும் வெளிச்சம் குறைவாக இருந்தாலும்...

மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் படமாகும் விஜய்யின் 58-வது படம்

கர்நாடகாவில் மைசூர் அரண்மனையை அடுத்து இரண்டாவது பெரிய அரண்மனையாக கருதப்படுவது லலிதா மஹால் அரண்மனை. சாமுண்டி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தின் சில காட்சிகள்கூட இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின்...

புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் டிரைலரும் வெளியாகிறது

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜீத்...

காங்கேசன்துறையை அடைந்தது யாழ்தேவி

யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற எயர்ஏசியா விமானம் மாயம்

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல்போயுள்ளது. இந்தோனேசியாவின் சுரயபோ நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பயணிகளுடன் சென்ற எயர்ஏசியா விமானசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமே காணாமல் போயுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் அதிகாலையுடன் QZ 8501 விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts