Ad Widget

இந்திய கற்கைநெறி வழிகாட்டல் கருத்தரங்கு

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இந்திய கற்கை நெறி தொடர்பான கருத்தரங்கும்,ஆலோசனை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இன்று காலை 10மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய கற்கை நெறியினை யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதுடன் அவர்களும் இந்தியாவிற்குச் சென்று கற்கை நெறியை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசு எட்சில் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்நிகழ்விற்கு இந்திய பதில் துணைத் தூதுவர் எஸ்.டி மூர்த்தி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts