Ad Widget

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

mahintha

ஐ.நா. சபையில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீனவர்களை விடுவிக்க உறுதியளித்திருந்தார் என்றும் இதன்படி அவர் நாடு திரும்பியதும் இந்த உத்தரவை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகத்திலிருந்து வந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்று ஊடாக அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 36 மீனவர்களும், யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 40 மீனவர்களுமாக 76 பேரையும் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 09 பேர் இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் நேற்றிரவு கைதான 16 மீனவர்களும் பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts